» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெயர் வைத்தால் சீனாவுக்கு சொந்தமாகிவிடாது : ஜெய்சங்கர் பதிலடி!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:50:04 AM (IST)
"அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவதால் அது அவர்களுக்கு சொந்தமாகிவிடாது" என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மீது சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அங்குள்ள நிலங்களுக்கெல்லாம் புதிய பெயர்களை சூடி, தங்கள் வரைபடத்தில் சீனா சேர்த்தது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்தது.முதலில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களையும் அடுத்து 15 இடங்களின் பெயர்களையும் 2023ல் 11 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியது. தற்போது 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், குடியிருப்புகளும் ஆறுகள், ஏரி, மலைப்பகுதிகள் ஆகியவை அடங்கும். இவற்றுக்கு சீனாவின் மாண்டரின் மொழியில் புதிய பெயர்களை சூட்டியுள்ளது.
சீனாவின் அத்துமீறல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கம் தான். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நமது ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது. அருணாச்சல பிரதேசத்தில் நமது ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாகவே அருணாச்சல பிரதேசம் இன்றும் நேற்றும் நாளையும் தொடரும். நீங்கள் வசிக்கும் வீட்டை என் பெயருக்கு மாற்றிவிட்டால் அது எனக்கு சொந்தமாகிவிடாது. சீனாவின் செயல்கள், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!
வியாழன் 19, மார்ச் 2026 4:57:50 PM (IST)

தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு
வியாழன் 19, மார்ச் 2026 4:41:28 PM (IST)

பெங்களூருவில் அதிர்ச்சிச் சம்பவம்: முதியவரை கூரியரில் அனுப்ப முயன்ற குடும்பம்!
புதன் 18, மார்ச் 2026 5:52:45 PM (IST)

வரதட்சணைக்காக கொடுமை: 4 மாத கர்ப்பிணி மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!
புதன் 18, மார்ச் 2026 4:59:20 PM (IST)

டெல்லி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:35:53 PM (IST)

வராக்கடன் வெறும் 2% தான்: முத்ரா திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!
புதன் 18, மார்ச் 2026 12:08:12 PM (IST)

