» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காங்கிரசின் பிரிவினைவாத அரசியலை அரியானா மக்கள் நிராகரித்துள்ளனர்: அமித் ஷா
புதன் 9, அக்டோபர் 2024 10:35:21 AM (IST)
காங்கிரசின் பிரிவினைவாத அரசியலை அரியானா மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்தார்.
அரியானாவில் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லபட்டது. ஆனால், அங்கு தற்போது காட்சிகள் மாறியுள்ளன.90 தொகுதிகள் கொண்ட அரியானா மாநிலத்தில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை. தற்போது அங்கு பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன. கிட்டத்தட்ட பா.ஜ.க. அரியானாவில் ஆட்சி அமைப்பது உறுதி என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த முறை பா.ஜ.க. அரியானாவில் ஆட்சி அமைத்தால் அது வரலாற்று சாதனையாக அமையும். இதன்படி தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வாக்கு வங்கிக்காக நாட்டை அவமதிப்பவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அரியானாவில் பாஜகவின் மகத்தான வெற்றி, பிரதமர் தலைமையிலான பாஜக அரசின் மீது விவசாயிகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், வீரர்கள் மற்றும் இளைஞர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றி. சாதி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் காங்கிரசின் "எதிர்மறை மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை" 'வீரபூமி' யான அரியானா மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர். பாஜகவின் வளர்ச்சி மற்றும் ஏழைகளின் நலனுக்கான 10 ஆண்டு கால சாதனையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களின் பூமியான அரியானா, வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வாக்கு வங்கிக்காக நாட்டை அவமதிப்பவர்களுக்கு பாடம் புகட்டியுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மாநிலத்திற்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பளித்த அரியானா மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜோத்பூர் விமான நிலையத்தில் ₹480 கோடி புதிய முனையக் கட்டிடம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
சனி 4, ஜூலை 2026 5:14:30 PM (IST)

வாக்கு, சீட், காணிக்கைத் திருட்டு நடக்கும் மூன்று இன்ஜின் அரசு இது: பாஜகவைச் சாடும் காங்கிரஸ்!
சனி 4, ஜூலை 2026 4:35:46 PM (IST)

கரூர் துயர சம்பவம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
வெள்ளி 3, ஜூலை 2026 4:26:43 PM (IST)

எத்தனால் கலப்பால் மைலேஜ் சற்றுக் குறைய வாய்ப்பு : மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஒப்புதல்!
வெள்ளி 3, ஜூலை 2026 11:52:24 AM (IST)

இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு: சானே டகாயிச்சி உறுதி!
வியாழன் 2, ஜூலை 2026 5:00:33 PM (IST)

பீகார், குஜராத் உள்பட 3 மாநிலங்களில் 30-ம் தேதி இடைத்தேர்தல் : தமிழகத்திற்கு அறிவிப்பு இல்லை
வியாழன் 2, ஜூலை 2026 4:00:09 PM (IST)


