» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தொடர் கதையாகும் வெடிகுண்டு புரளிகள்: ஒரே நாளில் 80 விமானங்களுக்கு மிரட்டல்!
வெள்ளி 25, அக்டோபர் 2024 8:48:00 AM (IST)
ஒரே நாளில் 80-க்கு மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
இந்திய விமான நிறுவனங்கள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகின்றன. இ-மெயில் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் அனுப்பப்படும் இந்த மிரட்டலால், விமான போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்து வருகின்றனர்.
மிரட்டல் வந்ததும் அந்த விமானங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதில் அப்படி எந்த மர்ம பொருளும் சிக்காமல், அந்த மிரட்டல்கள் வெறும் புரளியாக மாறி விடுகின்றன. இதனால் பெருமூச்சு விட்டாலும், தொடரும் இதுபோன்ற மிரட்டல்கள் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அத்துடன் கோடிக்கணக்கில் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
எனவே இத்தகைய மிரட்டல் விடுவோருக்கு எதிராக, விமானங்களில் பறக்கத்தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கு வசதியாக சட்டங்களில் திருத்தம் செய்யவும் பரிசீலித்து வருகிறது. ஆனாலும் இந்த மிரட்டல்கள் தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில் நேற்றும் ஒரே நாளில் 80-க்கு மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன. குறிப்பாக ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான தலா 20 விமானங்கள், அகசா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 13 விமானங்கள், அலையன்ஸ் ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 5 விமானங்கள் என 80-க்கு மேற்பட்ட விமானங்கள் இந்த மிரட்டலுக்கு ஆளாகி உள்ளன.
இதில் 3 விமானங்கள் சென்னை தொடர்பானவை ஆகும். அந்தவகையில் சிங்கப்பூர்-சென்னை விமானம், சென்னை-பெங்களூரு விமானம், ஜெய்ப்பூர்-சென்னை ஆகிய 3 விமானங்கள் இந்த மிரட்டலுக்கு ஆளாகின.
இவ்வாறு மிரட்டலுக்கு உள்ளான விமானங்கள் அனைத்திலும் உடனே பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டதாகவும், முடிவில் அவை வெறும் புரளி என கண்டறியப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் கூறியுள்ளன.இந்த விமானங்களையும் சேர்த்து கடந்த 11 நாட்களில் மட்டும் 250-க்கு மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.
தொடரும் இத்தகைய மிரட்டல்கள் அரசுக்கும், விமான நிறுவனங்களுக்கும் பெரும் தலைவலியாக மாறி உள்ளது. அதேநேரம் பயணிகளை தொடர்ந்து பீதியில் ஆழ்த்தி வருகிறது. எனவே இந்த மிரட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வியாழன் 10, ஜூலை 2025 4:51:19 PM (IST)

ஏமனில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் நிமிஷா : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வியாழன் 10, ஜூலை 2025 12:44:26 PM (IST)

மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை: பள்ளி முதல்வர், ஆசிரியைகள் உட்பட 8பேர் மீது வழக்கு
வியாழன் 10, ஜூலை 2025 12:23:40 PM (IST)

வதோதராவில் பழமை வாய்ந்த பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்: 13 பேர் பலி
வியாழன் 10, ஜூலை 2025 8:02:50 AM (IST)

நிலச்சரிவில் வீடுகள் தரைமட்டம்: 67 பேரின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்!
புதன் 9, ஜூலை 2025 5:51:49 PM (IST)

ஆறாம் வகுப்பு மாணவர்களில் 47% பேருக்கு வாய்ப்பாடு தெரியவில்லை : ஆய்வில் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:19:52 AM (IST)
