» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல்!
செவ்வாய் 26, நவம்பர் 2024 5:31:15 PM (IST)
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 20-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இவற்றில் ஆந்திர பிரதேசத்தில், வெங்கடரமணா ராவ் மொபிதேவி, பீதா மஸ்தான் ராவ் யாதவ் மற்றும் ரியாகா கிருஷ்ணையா ஆகிய 3 பேரும் கடந்த ஆகஸ்டில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர். இதனால், அந்த 3 இடங்களும் காலியாக உள்ளன. இதில், யாதவ் மற்றும் கிருஷ்ணையா ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பதவி காலம் 2028-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதியுடன் முடிவடைகிறது. மொபிதேவியின் பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி முடிகிறது.
ஒடிசாவில், பிஜு ஜனதா தள கட்சியில் இருந்து சுஜீத் குமார் வெளியேற்றப்பட்டதும் அந்த இடம் காலியாக உள்ளது. அவருடைய பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதேபோன்று, மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், அதனை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த ஜவகர் சர்கார் கடந்த செப்டம்பரில், எம்.பி. பதவியில் இருந்து விலகினார்.
அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த கிரிஷன் லால் பன்வார், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதும் எம்.பி. பதவியில் இருந்து விலகினார். இதனால், அந்த இடம் காலியாக இருக்கின்றது. இந்த சூழலில், காலியாக இருக்கின்ற இந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒடிசாவில் பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் கை ஓங்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீ விபத்தில் 8 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலி: ஹைதராபாத்தில் சோகம்
ஞாயிறு 18, மே 2025 9:25:13 PM (IST)

மத்திய அரசு அறிவித்த குழுவில் சசி தரூர் பெயர் இடம்பெற்றது நேர்மையற்றது: ஜெய்ராம் ரமேஷ்
சனி 17, மே 2025 4:49:28 PM (IST)

பாகிஸ்தானுக்கு நிதி அளிப்பது பயங்கரவாதத்துக்கு மறைமுக ஆதரவுக்கு சமம்: ராஜ்நாத் சிங்
சனி 17, மே 2025 12:03:28 PM (IST)

இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை: ப.சிதம்பரம் கவலை
வெள்ளி 16, மே 2025 4:36:27 PM (IST)

வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை கடலோர காவல் படை பத்திரமாக மீட்பு!
வெள்ளி 16, மே 2025 12:16:43 PM (IST)
_1747289815.jpg)
ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை!!
வியாழன் 15, மே 2025 11:47:14 AM (IST)
