» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் : பிரதமர் மோடி பெருமிதம்
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 5:42:17 PM (IST)
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் ஜனாதிபதி உரையில் இருந்தன. சாமானிய, நடுத்தர மக்களை முன்னேற்றிக்கொண்டு வந்துள்ளது பாஜக அரசு. ஏழை மக்களின் நிலையை அரசு புரிந்து கொண்டுள்ளது. வீடில்லாத 4 கோடி பேர் வீடு பெற்றுள்ளனர். ஏழைகள் மழைக்காலத்தில் கூரையின்றி அவதிப்படுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
5 ஆண்டுகளில் 12 கோடி இல்லங்களுக்கு குழாய்களில் குடிநீர் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் வறுமை மறைந்துள்ளது. வறுமையை ஒழித்துள்ளோம். சிலர் ஏழை மக்களின் இல்லங்களில் புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள். மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு சேர்ப்பதே அரசியல் கட்சிகளின் வேலை, கள நிலவரத்தை அறிந்தவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மாற்றம் உண்டாகிறது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
