» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் : பிரதமர் மோடி பெருமிதம்
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 5:42:17 PM (IST)
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் ஜனாதிபதி உரையில் இருந்தன. சாமானிய, நடுத்தர மக்களை முன்னேற்றிக்கொண்டு வந்துள்ளது பாஜக அரசு. ஏழை மக்களின் நிலையை அரசு புரிந்து கொண்டுள்ளது. வீடில்லாத 4 கோடி பேர் வீடு பெற்றுள்ளனர். ஏழைகள் மழைக்காலத்தில் கூரையின்றி அவதிப்படுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
5 ஆண்டுகளில் 12 கோடி இல்லங்களுக்கு குழாய்களில் குடிநீர் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் வறுமை மறைந்துள்ளது. வறுமையை ஒழித்துள்ளோம். சிலர் ஏழை மக்களின் இல்லங்களில் புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள். மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு சேர்ப்பதே அரசியல் கட்சிகளின் வேலை, கள நிலவரத்தை அறிந்தவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மாற்றம் உண்டாகிறது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி பொறுப்பேற்பு
புதன் 19, பிப்ரவரி 2025 4:23:57 PM (IST)

ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம் ஊழியர்களின் பணி நேரம் குறைப்பு: தெலுங்கானா அரசு அறிவிப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 11:23:45 AM (IST)

அரசுப்பள்ளிகளில் மதிய உணவில் கடலை மிட்டாய் வழங்க தடை: கர்நாடக அரசு உத்தரவு
புதன் 19, பிப்ரவரி 2025 11:18:08 AM (IST)

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம்: காங்கிரஸ் கண்டனம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:27:17 PM (IST)

டெல்லியில் கடுமையான நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின - பொதுமக்கள் அச்சம்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 11:01:28 AM (IST)

கண்ணாடியை உடைத்து காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணிகள்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 10:12:01 AM (IST)
