» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:44:27 AM (IST)
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி - கூகி பிரிவினரிடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பைரேன் சிங், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, முதல்வர் பதவியை பா.ஜ., மூத்த தலைவர் பைரேன் சிங், 64, ராஜினாமா செய்தார். இதை ஏற்ற கவர்னர் அஜய் குமார் பல்லா ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அரசியலமைப்பின் 356வது பிரிவின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்து உள்ளார்.
ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கவர்னர் அஜய் பல்லாவிடம் வந்த அறிக்கை மற்றும் கிடைத்த தகவல்களை தீவிரமாக பரிசீலனை செய்ததில், இந்திய அரசியலமைப்பின்படி அந்த மாநிலத்தில் அரசை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என்பதில் ஜனாதிபதி திருப்தி அடைந்துள்ளார், எனக்கூறப்பட்டு உள்ளது. 1951ல் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசியலமைப்பு தின விழா: பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய துணை ஜனாதிபதி!
புதன் 26, நவம்பர் 2025 5:38:21 PM (IST)

வங்கி கடன்களுக்கான வட்டி நிச்சயமாக குறைக்கப்பட வாய்ப்பு : ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்
புதன் 26, நவம்பர் 2025 12:56:22 PM (IST)

ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடுகள்; குஜராத்துக்கு ரூ.6.65 கோடி அபராதம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
புதன் 26, நவம்பர் 2025 12:43:21 PM (IST)

இந்திய அரசியலமைப்பு தினத்தில் உறுதி ஏற்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்!
புதன் 26, நவம்பர் 2025 11:59:51 AM (IST)

சிம்கார்டை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தினால் வாடிக்கையாளர்தான் குற்றவாளி : டிராய் எச்சரிக்கை
செவ்வாய் 25, நவம்பர் 2025 4:51:31 PM (IST)

அயோத்தி ராமர் கோயிலில் காவிக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:41:52 PM (IST)




