» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம் ஊழியர்களின் பணி நேரம் குறைப்பு: தெலுங்கானா அரசு அறிவிப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 11:23:45 AM (IST)
ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து தொடங்கும் ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீடு திரும்பலாம் என்ற உத்தரவை தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ளது.
அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங், வாரியம் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்குப் பொருந்தும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா அரசின் இந்த அறிக்கையை அம்மாநில பா.ஜ.க. விமர்சித்து வருகிறது. தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் தந்திரம். நவராத்திரி விரதத்தின்போது இந்துக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு : நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 11, மார்ச் 2025 11:34:06 AM (IST)

தி.மு.க. எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள் என பேச்சு: மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
திங்கள் 10, மார்ச் 2025 8:25:51 PM (IST)

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் திமுக அரசு பாழடிக்கிறது: தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
திங்கள் 10, மார்ச் 2025 12:03:41 PM (IST)

தங்ககடத்தல் வழக்கில் கைது: சிறைக்குள் தூங்காமல் தவிக்கும் நடிகை ரன்யாராவ்!
சனி 8, மார்ச் 2025 9:23:16 PM (IST)

அணை கட்ட அனுமதிக்காவிட்டால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது: வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
சனி 8, மார்ச் 2025 4:57:02 PM (IST)

சாவர்க்கர் குறித்து கருத்து: ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்!
வெள்ளி 7, மார்ச் 2025 12:00:10 PM (IST)
