» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எம்புரான் திரைப்படத் தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1½ கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 9:16:37 AM (IST)

எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் நிதி நிறுவன அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1½ கோடி, மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி உள்ள ‘எம்புரான்' திரைப்படத்தின் 4 தயாரிப்பாளர்களில் ஒருவரும், கோகுலம் நிதி நிறுவனத்தின் அதிபருமான கோபாலகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் கொச்சி மண்டலத்தை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் கோகுலம் நிதி நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் நீலாங்கரையில் உள்ள கோபாலகிருஷ்ணன் வீடு ஆகியவை சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. விடிய, விடிய நடைபெற்ற இந்த சோதனை நேற்று பகலில் நிறைவடைந்தது. இந்த சோதனையில் ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறையின் கொச்சி மண்டலம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோகுலம் நிதி நிறுவனம், ரிசர்வ் வங்கி கடந்த 2015-ம் ஆண்டு வகுத்த விதிமுறைகளை மீறி உரிய அனுமதி இன்றி இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் நபர்களிடம் இருந்து சந்தா தொகை பெற்றிருக்கும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அன்னிய மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் கோகுலம் நிதி நிறுவனம் வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் இருந்து ரூ.371.80 கோடி பணத்தை ரொக்கமாகவும், ரூ.220.74 கோடியை காசோலையாகவும் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சோதனையில் ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோகுலம் நிதி நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது. அதனடிப்படையில் அப்போது இந்த நிறுவனம் தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
திங்கள் 7, ஏப்ரல் 2025 5:13:43 PM (IST)

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு !
திங்கள் 7, ஏப்ரல் 2025 5:08:42 PM (IST)

வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை: ஜேபி நட்டா
திங்கள் 7, ஏப்ரல் 2025 3:40:50 PM (IST)

இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும்: பிரதமர் மோடி நம்பிக்கை
சனி 5, ஏப்ரல் 2025 5:32:43 PM (IST)

இயற்கை பேரிடர் பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ரூ.522.34 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு
சனி 5, ஏப்ரல் 2025 5:13:53 PM (IST)

ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ. 3,984.86 கோடி செலவில் 3வது ஏவுதளம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 12:35:04 PM (IST)
