» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: 4 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
சனி 24, மே 2025 12:28:31 PM (IST)
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இன்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு 6 நாள்களுக்கு முன்னதாகவே கேரளத்தில் பருவமழை தொடங்கியுள்ளது.
கடந்த 2000 - 2025 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி பருவமழை தொடங்கியதே மிகவும் முன்கூட்டிய பருவமழை தொடக்கமாக இருந்தது. இதன்பின்னர் தற்போது 2025ல் மே 24ல் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக 1990 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதியே கேரளத்தில் பருவ மழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரிக்கு வட மேற்கே 40 கிலோ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது இன்று முற்பகலில் கரையைக் கடக்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மைனர் பெண்ணை கடத்திக் கொன்று ட்ராலி பேக்கில் வைத்து உடல் வீச்சு : காதலன் உட்பட 7 பேர் கைது!
புதன் 4, ஜூன் 2025 5:21:16 PM (IST)

கமல்ஹாசன் மீது நாங்கள் மென்மையான போக்கை காட்டவில்லை : கர்நாடக துணை முதல்வர்
புதன் 4, ஜூன் 2025 12:47:26 PM (IST)

18வது சீசனில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி : தேர்தல் ஆணையம் நூதன முறையில் வாழ்த்து!
புதன் 4, ஜூன் 2025 11:12:21 AM (IST)

சிறுமி பலாத்காரம்... உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் மரணம்: ராகுல் கண்டனம்
செவ்வாய் 3, ஜூன் 2025 5:10:20 PM (IST)

நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? கமல் ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
செவ்வாய் 3, ஜூன் 2025 12:45:30 PM (IST)

தக் லைப் தடை விவகாரம்: கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு முதல்வர் சித்தராமையா ஆதரவு!
திங்கள் 2, ஜூன் 2025 4:34:43 PM (IST)
