» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடிவா? மத்திய அரசு விளக்கம் - ராகுல் விமர்சனம்!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:37:12 PM (IST)
ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி தன்னிடம் உறுதியளித்திருப்பதாக டிரம்ப் வெளியிட்ட நிலையில், டிரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார் என்று ராகுல் விமர்சித்துள்ளார்.

அதில், தெரிவித்திருப்பதாவது: ”கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. நிலையற்ற எரிசக்தி சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. நமது இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தை கொண்டு முழுமையாக வழிநடத்தப்படுகின்றன.
நிலையான எரிசக்தி விலை மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்தல் ஆகியவை நமது கொள்கையின் இரட்டை இலக்காக இருக்கின்றன. இதில், சந்தை நிபந்தனைகளைப் பொறுத்து நமது ஆற்றல் ஆதாரங்களை விரிவுப்படுத்துதல் மற்றும் பொருத்தமான முறையில் பன்முகப்படுத்துதல் அடங்கும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம். இது கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடனான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்ரு வருகின்றன.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தப் போவதாக டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தாரா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
டிரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார். ரஷியாவின் எண்ணெய்யை இந்தியா வாங்காது என்று முடிவு செய்து டிரம்பை அறிவிக்க அனுமதிக்கிறார்.” என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 15, அக்டோபர் 2025 5:05:42 PM (IST)

அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம்: பிரதமர் மோடி
புதன் 15, அக்டோபர் 2025 11:05:01 AM (IST)

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)

பிரதமர் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:40:03 PM (IST)

வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி விருப்பம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:43:41 PM (IST)
