» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண் பக்தர்கள் பலி!

வியாழன் 6, நவம்பர் 2025 8:38:12 AM (IST)



உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள சுனார் ரயில் நிலையத்தில் சோன்பத்ராவில் இருந்து வந்த கோமோ-பிரயாக்ராஜ் பர்வதி சோபன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 4-வது நடைமேடையில் வந்து நின்றது. அதில் இருந்து வந்த பக்தர்கள் கார்த்திகை பூர்ணிமாவையொட்டி கங்கையில் புனித நீராட வாரணாசி செல்வதற்காக சுனார் ரயில் நிலையத்தில் இறங்கினர்.

பக்தர்கள் ரயில்வே நடைபாலத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக எதிர் திசையில் உள்ள 3-வது நடைமேடைக்கு செல்ல ரயில் தண்டவாள பாதையை கடந்தனர். அப்போது அந்த ரயில் தடத்தில் வேகமாக வந்த ஹவுரா-கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் பல பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 6 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக போலீசார், ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்கள் சவிதா (28) சாதனா (16), ஷிவ் குமாரி (12), அஞ்சு தேவி (20), சுசிலா தேவி (60), கலாவதி (50) என அடையாளம் காணப்பட்டனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, உடனடியாக நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory