» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி

வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

பயணிகளின் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட் வெளியிட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவு அட்டவணைகளை (Chart list) வெளியிடும் முறையில் புதிய விதிமுறைகளை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் இருக்கை நிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அதாவது தற்போது வரை ரயில்கள் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சார்ட் லிஸ்ட் வெளியிடப்படுகிறது.

இதனால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்து இருப்பவர்கள் தங்கள் டிக்கெட் கன்பார்ம் ஆகுமா? இல்லையா? என்பது தெரியாமல் திக் திக் மனநிலையுடன் காத்திருப்பார்கள். டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் போகும் பட்சத்தில் இறுதி நேரத்தில் மாற்று வழிகளை தேட வேண்டியிருக்கும். இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இத்தகைய சிரமங்களை தவிர்க்கும் விதமாக சராசரியாக 10 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் லிஸ்ட் வெளியிடும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

இதன்படி, காலை 5:01 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை முந்தைய நாள் இரவு 8 மணிக்குள் தயாரிக்கப்படும். மதியம் 2:01 மணி முதல் இரவு 11:59 மணி வரை மற்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே அட்டவணை தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைப்படி சார்ட் லிஸ்ட் வெளியிடுவதற்கு டிக்கெட் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS)-த்திற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளதாம். விரைவில் இது இந்த விதிகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால் பயணிகள் தங்கள் டிக்கெட் கன்பார்ம் ஆகிவிட்டதா? இல்லையா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பதால் ரயில்வேயின் இந்த வசதி பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory