» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அந்தமான் –நிக்கோபார் தீவுகளில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: ஆய்வு மையம் தகவல் தேசிய

திங்கள் 2, பிப்ரவரி 2026 11:21:43 AM (IST)

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று (பிப். 2) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NCS வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அகலம் (Latitude) 9.03 டிகிரி வடக்காகவும், தீர்க்கரேகை (Longitude) 92.78 டிகிரி கிழக்காகவும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளமான X தளத்தில் NCS வெளியிட்டுள்ள பதிவில், "02.02.2026 அன்று காலை 03:31:12 மணிக்கு, நிக்கோபார் தீவுகள் பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் 10 கிலோமீட்டர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீவுகள், இந்தியாவின் நிலநடுக்க மண்டல வரைபடத்தின் படி 'சீஸ்மிக் மண்டலம் – V' ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது உலகிலேயே மிக அதிக நிலநடுக்கச் செயல்பாடுகள் காணப்படும் பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory