» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம்: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சனி 21, மார்ச் 2026 11:53:47 AM (IST)

இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். பரிவர்த்தனை தொடர்பான புதிய கட்டண நடைமுறை குறித்து குறுஞ்செய்தி வாயிலாக அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி அனுப்பியுள்ள அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 5 முறை மட்டுமே ஏ.டி.எம். மூலம் கட்டணமின்றிப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். 5 முறைக்கு மேலாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ. 17 கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தக் கட்டணத்துடன் கூடுதலாக ஜி.எஸ்.டி. வரியும் தனித்தனியாக வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டண நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கியின் இந்தச் கூடுதல் கட்டண அறிவிப்பு சாமானிய மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 93.84% தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 2-வது இடம்!
புதன் 13, மே 2026 4:07:50 PM (IST)

நீட் வினாத்தாள் கசிவு: இதுவரை 15 பேர் கைது - சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
புதன் 13, மே 2026 3:34:06 PM (IST)

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு: இறக்குமதி வரியை 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு!
புதன் 13, மே 2026 11:27:46 AM (IST)

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி: பிரதமர் மோடி முன்னிலையில் அமைச்சரவை பதவியேற்பு!
செவ்வாய் 12, மே 2026 5:41:53 PM (IST)

வினாத்தாள் கசிவு எதிரொலி: நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
செவ்வாய் 12, மே 2026 4:37:51 PM (IST)


