» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாகிஸ்தான் மிரட்டலுக்கு பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? – மம்தா பானர்ஜி காட்டம்
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:56:30 AM (IST)
பாகிஸ்தான் விடுத்த மிரட்டல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்காள சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, நாடியா மாவட்டத்தில் உள்ள பெதுவாடஹரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: "கொல்கத்தாவைத் தாக்குவோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காஜா ஆசிப் மிரட்டல் விடுத்துள்ளார். இம்மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, இந்த மிரட்டலுக்கு ஏன் இன்னும் தகுந்த பதிலடி கொடுக்கவில்லை? இதன் பின்னணி என்ன?"
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த ஏதேனும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா? மத்திய அரசு மேற்கு வங்க மக்களைக் குறிவைத்தால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். இந்தியக் குடிமக்களாகிய நாங்கள் இதுபோன்ற மிரட்டல்களைச் சகித்துக் கொள்ள மாட்டோம். இதற்குப் பதில் சொல்ல முடியாமல் அமைதி காக்கும் நீங்கள் பதவி விலக வேண்டும்," என ஆவேசமாகப் பேசினார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தை முன்வைத்து மம்தா பானர்ஜி எழுப்பியுள்ள இந்தக் கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை அரசியலாக்க வேண்டாம் என பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)

அனைத்து மாநிலங்களிலும் 50% தொகுதிகள் உயர்வு: மக்களவையில் மத்திய அமைச்சர் உறுதி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:12:22 PM (IST)

பெண்கள் இட ஒதுக்கீட்டைச் சீர்குலைக்க திமுக முயற்சி - தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:12:41 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்தில் 8 பக்தர்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல் - நிதியுதவி அறிவிப்பு
வியாழன் 16, ஏப்ரல் 2026 10:21:14 AM (IST)

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் 93.7% பேர் தேர்ச்சி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:37:11 AM (IST)

வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:12:11 PM (IST)


இந்தியன்Apr 15, 2026 - 06:47:01 PM | Posted IP 104.2*****