» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)

supremcourtRavishan.jpg

டெல்லி யமுனை நதிக்கரையில் உலக கலாச்சார விழா நடத்தியதற்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 'வாழும் கலை' அமைப்புக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 5 கோடி அபராதத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் யமுனை நதிக்கரையில் வாழும் கலை அமைப்பு சார்பில் உலக கலாச்சார விழா நடத்தப்பட்டது. இந்த விழாவால் யமுனை ஆற்றின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதாகக் கூறி, வாழும் கலை அறக்கட்டளைக்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்துத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

அபராதத் தொகையைச் செலுத்திய வாழும் கலை அமைப்பு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது: கலாச்சார விழா நடத்தியதால் யமுனை நதியின் சுற்றுச்சூழலுக்குச் சேதம் ஏற்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 5 கோடி அபராதத்தை ரத்து செய்த நீதிபதிகள், ஆன்மீக அமைப்பு செலுத்திய அந்தத் தொகையை டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) உடனடியாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory