» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 56 பேர் பலி: ஆப்பிரிக்க நாட்டில் சோகம்!!
செவ்வாய் 3, டிசம்பர் 2024 8:36:26 AM (IST)

ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 56 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் மமதி டூம்பூயா தலைமையிலான ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அவரை கவுரவப்படுத்தும் வகையில் கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 இந்த தொடரின் இறுதிப்போட்டி ஜெரேகோர் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெரேகோர் மற்றும் லேப் அணிகள் மோதின. இந்த போட்டியைக் காண ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் அங்கு திரண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் நடுவர் திடீரென சர்ச்சைக்குரிய முடிவை கூறினார்.
 இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த ஜெரேகோர் அணி ரசிகர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
 எனினும் இந்த கலவரத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 56 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மமாடோவ் அவுரி பா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)

மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஆதரவு : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
சனி 25, அக்டோபர் 2025 5:46:24 PM (IST)




