» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைனில் குடியிருப்புகள் மீது ரஷ்யா குண்டு வீச்சு : பொதுமக்கள் 13 பேர் உயிரிழப்பு
வியாழன் 9, ஜனவரி 2025 12:01:01 PM (IST)

உக்ரைனில் குடியிருப்புகள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசியதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் ஸபோரிஷியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது. இதில், 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தாக்குதலில் ரத்த காயங்களுடன் மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவினர் சிகிச்சை கொடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் கூறியதாவது: ரஷ்யாவின் மனிதாபிமானமற்ற இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ரஷ்யாவின் இந்த தாக்குதலில் சாதாரண பொதுமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா இதுக்கு உரிய பதில் சொல்லியே ஆக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்: நியூயார்க் மேயர் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:31:45 PM (IST)

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்புகண்டனம்
திங்கள் 7, ஜூலை 2025 5:20:18 PM (IST)

அமெரிக்காவை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்: கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் மாயம்
ஞாயிறு 6, ஜூலை 2025 11:15:35 AM (IST)

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)
