» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!
சனி 18, ஜனவரி 2025 11:18:01 AM (IST)

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உலகளவில் பிரபரமான 'டிக் டாக்' செயலியை சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது.
17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது. இதை எதிர்த்து, அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது. முன்னதாக டிக்டாக் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர்க்காலச் சூழல் மத்தியில் ரமலான் பெருநாள்: அமைதி வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
சனி 21, மார்ச் 2026 11:58:42 AM (IST)

அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு: அதிபர் திஸாநாயக்க தகவல்
வெள்ளி 20, மார்ச் 2026 4:07:14 PM (IST)

ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்: ட்ரம்ப் - நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு!
வெள்ளி 20, மார்ச் 2026 11:45:05 AM (IST)

வடகொரியத் தேர்தலில் கிம் ஜாங் உன் வெற்றி: 0.07% எதிர்ப்பு வாக்குகளால் பரபரப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:46:37 PM (IST)

ஈரான் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டாரா? இஸ்ரேல் அறிவிப்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:48:46 PM (IST)

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாகத் தலிபான் அரசு அறிவிப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 10:33:45 AM (IST)

