» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கொலை சதியில் இருந்து 25 நிமிடத்தில் தப்பித்தேன் : வங்கதேச மாஜி பிரதமர் ஷேக் ஹசீனா தகவல்
சனி 18, ஜனவரி 2025 4:29:07 PM (IST)
"வங்கதேசத்தில் என்னை கொல்ல நடந்த சதியில் இருந்து 25 நிமிடத்தில் உயிர் தப்பித்தேன்" என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பாரபட்சம் காட்டுவதாக மாணவர் அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடும் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்நிலையில், தற்போது ஷேக் ஹசீனா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் அவர் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் என்னை கொல்ல சதி நடந்தது. நான் 25 நிமிடத்தில் மரணத்திலிருந்து தப்பித்தேன். நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அல்லா விரும்புகிறார்.
நானும், எனது தங்கையும் 20 முதல் 25 நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்தோம். அவர்கள் என்னை எப்படி கொல்ல திட்டமிட்டனர் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இருப்பினும் நான் இன்னும் உயிருடன் இருப்பது அல்லாவின் கருணை தான். நான் எனது தேசம் இல்லாமல் இருக்கிறேன். என் வீடு, உடைமைகள் எல்லாம் எரிக்கப்பட்டுவிட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது: அமெரிக்கா
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:47:53 PM (IST)

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
வியாழன் 23, அக்டோபர் 2025 4:21:51 PM (IST)

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இந்தியா காரணமா? ஆப்கானிஸ்தான் பதிலடி
புதன் 22, அக்டோபர் 2025 12:24:10 PM (IST)

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:53:30 PM (IST)

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)




