» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கே2-18பி கோளில் உயிரினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சூரியகுடும்பத்திற்கு வெளியே பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2-18பி என்ற கோள் உள்ளது. இந்த கோள் பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோள் பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதாகும். இந்நிலையில், இந்த கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன். இவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கே2-15பி கோளில் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தது. அதில், பூமியில் வாழும் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறான டைமெத்தில் சல்பைடு கண்டறிந்தனர்.
இதன் மூலம் பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞான வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெட்பிளிக்ஸ் மொத்த படமும் நொடியில் டவுன்லோடு : இணைய வேகத்தில் ஜப்பான் உலக சாதனை!!
சனி 12, ஜூலை 2025 5:32:49 PM (IST)

நாசாவில் செலவினங்களை குறைக்க 2ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்? டிரம்ப் அதிரடி முடிவு!
வெள்ளி 11, ஜூலை 2025 10:30:06 AM (IST)

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)

பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 12:42:07 PM (IST)

விசா இல்லாமல் பயணிக்க 74 புதிய நாடுகளுக்கு சீனா அனுமதி : பட்டியலில் இந்தியா இல்லை!!
புதன் 9, ஜூலை 2025 11:45:34 AM (IST)

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்: நியூயார்க் மேயர் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:31:45 PM (IST)
