» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கே2-18பி கோளில் உயிரினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சூரியகுடும்பத்திற்கு வெளியே பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2-18பி என்ற கோள் உள்ளது. இந்த கோள் பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோள் பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதாகும். இந்நிலையில், இந்த கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன். இவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கே2-15பி கோளில் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தது. அதில், பூமியில் வாழும் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறான டைமெத்தில் சல்பைடு கண்டறிந்தனர்.
இதன் மூலம் பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞான வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி படுகொலை: சொந்தக் குடும்பத்தினரே தீர்த்துக்கட்டினர்?
திங்கள் 23, மார்ச் 2026 12:55:43 PM (IST)

வளைகுடாப் போரில் அதிரடி திருப்பம்: 4,000 கி.மீ. தூரம் பாயும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:47:13 AM (IST)

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா பரிசீலனை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:23:35 PM (IST)

போர்க்காலச் சூழல் மத்தியில் ரமலான் பெருநாள்: அமைதி வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
சனி 21, மார்ச் 2026 11:58:42 AM (IST)

அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு: அதிபர் திஸாநாயக்க தகவல்
வெள்ளி 20, மார்ச் 2026 4:07:14 PM (IST)

ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்: ட்ரம்ப் - நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு!
வெள்ளி 20, மார்ச் 2026 11:45:05 AM (IST)

