» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் 3-வது முறையாக டிக் டாக் செயலி இயக்க அவகாசம் நீட்டிப்பு: டிரம்ப் உத்தரவு!
வெள்ளி 20, ஜூன் 2025 11:23:50 AM (IST)

அமெரிக்காவில் 3-வது முறையாக 'டிக் டாக்' செயலி தொடர்ந்து இயங்குவதற்கான அவகாசத்தை நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் 'பைட் டான்ஸ்'(Byte Dance) நிறுவனத்திற்கு சொந்தமான 'டிக்டாக்' செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால், ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 'டிக்டாக்' செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த சட்டத்திற்கு தடை கோரி 'பைட் டான்ஸ்' நிறுவனம் வாஷிங்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 'பைட் டான்ஸ்' நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், 'டிக்டாக்' செயலி மீதான தடை சட்டத்தால் அமெரிக்க மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 'டிக்டாக்' செயலி அமெரிக்காவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி தொடர்ந்து இயங்குவதற்கான அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். 'டிக்டாக்' செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் வெள்ளை மாளிகை தெரிவித்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் 'டிக்டாக்' செயலிக்கான அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
இதனால் அமெரிக்க மக்கள் அந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 3-வது முறையாக 'டிக் டாக்' செயலி தொடர்ந்து இயங்குவதற்கான அவகாசத்தை நீட்டித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் இந்த அவகாசம் தொடர்பான தெளிவான சட்ட வரையறைகள் எதுவும் விளக்கமாக தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை டிரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு 'டிக்டாக்' செயலி உதவியாக இருந்தது என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானைத் தாக்கினால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:39:08 PM (IST)

மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்!
வியாழன் 19, ஜூன் 2025 5:49:59 PM (IST)

ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:07:55 AM (IST)

அமெரிக்காவின் தலையீடு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: காமெனி எச்சரிக்கை!
புதன் 18, ஜூன் 2025 4:44:06 PM (IST)

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்பட 585 பேர் பலி!
புதன் 18, ஜூன் 2025 10:41:37 AM (IST)

இங்கிலாந்து வரலாற்றில் முதல்முறை : உளவுப் பிரிவின் தலைவராக பெண் நியமனம்!
செவ்வாய் 17, ஜூன் 2025 11:40:46 AM (IST)
