» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நிமிஷாவை செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: கொல்லப்பட்டவரின் சகோதரர் திட்டவட்டம்!

வியாழன் 17, ஜூலை 2025 11:46:44 AM (IST)

தன் சகோதரரை கொலை செய்த கேரள செவிலியர் நிமிஷா​வின் குற்​றத்​துக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது என அப்​தெல்ஃபத்தா மெஹ்தி திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகை​யில், "இந்​திய ஊடகங்​கள் குற்​ற​வாளி நிமிஷாவை பாதிக்​கப்​பட்​ட​வ​ராக சித்​தரிக்​கும் பணி​யில் ஈடு​வரு​கின்​றன. இது எங்​களது குடும்​பத்​தினரிடம் ஆழ்ந்த அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. எனது சகோதரர் தலால் அப்​தோ மெஹ்​தியை கொலை செய்த குற்​றத்​துக்​காகவே நிமிஷா பிரி​யா​வுக்கு இந்த தண்​டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. 

எனவே அவருக்கு மரண தண்​டனையை நிச்​ச​யம் நிறைவேற்ற வேண்​டும். இந்த குற்​றத்​துக்கு அவருக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது என்​றார். கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்​தோ மெஹ்​தியை கொலை செய்த குற்​றத்​துக்​காக கேரள செவிலியர் நிமிஷா பிரி​யா​வுக்கு மரண தண்​டனை விதிக்​கப்​பட்டு நேற்று அது நிறைவேற்​றப்பட இருந்​தது. 

இந்த நிலை​யில், நீண்​ட​கால​மாக நடை​பெற்ற பலமுனை பேச்​சு​வார்த்​தைக்கு பிறகு நிமிஷா​வின் மரண தண்​டனை அடுத்த உத்​தரவு வரும் வரை தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபூபக்​கர் முஸ்​லி​யாரின் மத்​தி​யஸ்​தம் மற்​றும் இந்​திய அரசின் தீவிர முயற்​சி​யின் பலனாக இந்த தண்​டனை நிறுத்​தம் சாத்​தி​ய​மாகி​யுள்​ளது. இருப்​பினும், கொலை​யான மெஹ்​தி​யின் குடும்​பத்​துக்கு குரு​திப் பணம் கொடுத்து நிமிஷாவை மீட்​ப​தில் இன்​னும் சிக்​கல் நீடித்​து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory