» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரம்மபுத்திரா அணை திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீன அரசு விளக்கம்
வியாழன் 24, ஜூலை 2025 12:12:05 PM (IST)

பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டுமான திட்டத்தால் ஏற்படும் நன்மை நிச்சயம் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய அணையை பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ரூ.14 லட்சம் கோடி மதிப்பில் கட்டத்தொடங்கியுள்ளது சீனா. யார்லங் ஸாங்போ என்ற பெயரில்( பிரம்மபுத்திரா) திபெத் பிராந்தியத்தில் ஓடும் இந்த நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கான தொடக்க விழா கடந்த ஜூலை 19ஆம் தேதி சீனப் பிரதமர் லீ கியாங் தலைமையில் நடந்தது.
பிரம்மபுத்திரா நதி சீனாவில் பிறந்தாலும், இந்தியா வழியாக கடந்து வங்கதேசத்திற்கு சென்று கடலில் கடக்கிறது. சீனா அணை கட்டி அதை தடுக்கும் பட்சத்தில் இந்தியா மற்றும் வங்கதேச பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். இந்த புதிய அணைக்கு மொடுடோ நீர்மின் நிலையம் என பெயர் கூட சீனா சூட்டிவிட்டது. இந்த மெகா அணை கட்டப்பட்டுவிட்டால், உலகின் மிகப் பெரிய அணை புதிய சாதனை நிகழ்த்தப்படும்.
அதே நேரத்தில் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், இந்தியாவும், வங்கதேசமும் அணை கட்டுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த அணை விவகாரம் கு றித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாவது: அணை கட்டப்படுவதால், பிரம்மபுத்திரா நதி பாய்ந்தோடும் நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும். இதனால், இயற்கை பேரிடர் நிகழ்வது குறையும்.
அணை கட்டும் திட்டம் தொடர்பாக இந்தியா மற்றும் வங்கதேசத்திடம் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா பாய்ந்தோடும் நாடுகளின் நலனிலும் சீனா அக்கறை கொண்டுள்ளது. அணை கட்டுமான திட்டத்தால் ஏற்படும் நன்மை நிச்சயம் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அணை கட்டுவது என்பது சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்டது" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)
