» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 150பேர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்!!
சனி 16, ஆகஸ்ட் 2025 10:26:52 AM (IST)

பாகிஸ்தானில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள லோயர் டிர், பஜவுர், அபோட்டாபாத் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த வெள்ளப்பெருக்கில் ஏராளமான வீடுகள் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் இடையே உள்ள காரகோரம், பால்டிஸ்தான் நெடுஞ்சாலைகள் போன்றவை அடித்துச் செல்லப்பட்டன.
இதனால் அந்த நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். எனவே அவர்கள் அனைவரும் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல் பஞ்ச்கோரா, சுத்னோதி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் மைதான் சோரி பாவ் நகரில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த நிலச்சரிவு மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே வெள்ளப்பெருக்கில் மேலும் பலர் அடித்துச் செல்லப்பட்டு உள்ளனர். எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)




