» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் நாட்டிற்கு சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:46:00 PM (IST)

உக்ரைன் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் சுதந்திர தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உக்ரைனின் சுதந்திர தினத்தன்று வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமைதியை உருவாக்க முயற்சிக்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.
தற்போது முழு உலகமும் இந்த கொடூரமான போரை கண்ணியத்துடனும் நீடித்த அமைதியுடனும் முடிவுக்கு கொண்டுவரும் பணியில் இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நம்புகிறோம். பேச்சுவார்த்தையை வலுப்படும் ஒவ்வொரு முடிவும் ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தோ-பசிபிக் மற்றூம் அதற்உ அப்பாலும் சிறந்த பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)




