» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை புத்தக கண்காட்சியில் நூல் வெளியிட்டு விழா
ஞாயிறு 11, பிப்ரவரி 2024 10:01:20 PM (IST)

பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் நெல்லை படைப்பாளர் அரங்கில் காமராசு செல்வன் எழுதிய விடிலிக்காடு நாவல் வெளியீட்டு விழா நடந்தது.
எழுத்தாளர் சிற்பி பாமா தலைமை வகித்தார். பாப்பாக்குடி செல்வமணி, முனைவர் கந்தசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நூலை வெளியிட முனைவர் ஜோசப்ராஜ், முதல் நூலை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான், தமிழ்ச்செம்மல் பாமணி, பட்டிமன்ற நடுவர் புத்தனேரி கோ. செல்லப்பா, கவிஞர் ஜெயபாலன், கவிஞர் சுப்பையா, ஆசிரியர் ஆவுடையப்ப குருக்கள், பாப்பாக்குடி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலாசிரியர் காமராசு செல்வன் ஏற்புரை வழங்கினார்.
பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் நெல்லை படைப்பாளர் அரங்கில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகள் நூல் வெளியீட்டு விழா நடந்தது.
புத்தனேரி செல்லப்பா தலைமை வகித்தார். தமிழ்ச்செம்மல் பாமணி, ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆ நூலை பாப்பாக்குடி செல்வமணி வெளியிட முதல் நூலை நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான் பெற்றுக்கொண்டார். சிற்பி பாமா முனைவர் ஜோசப்ராஜ், முனைவர் கந்தசுப்புகவிஞர் ஜெயபாலன், கவிஞர் சுப்பையா, ஆசிரியர் ஆவுடையப்ப குருக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். எழுத்தாaளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்கினார்.
பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் வள்ளலார் அரங்கில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தீதும் நன்றே நாவல் அறிமுக விழா நடந்தது.தன்னூத்து குமரன் அறிமுகம் செய்ய புத்தனேரி செல்லப்பா, தமிழ்ச்செம்மல் பாமணி ஆகியோர் பெற்றுக் கொண்டார் நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான், சிற்பி பாமா முனைவர் ஜோசப்ராஜ், முனைவர் கந்தசுப்பு, கவிஞர் ஜெயபாலன், கவிஞர் சுப்பையா, எழுத்தாளர் நக்கீரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)
