» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கியதாக பாஜக பிரமுகர் கைது

சனி 13, ஏப்ரல் 2024 3:14:06 PM (IST)

நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கியதாக  பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை திம்மராஜபுரத்தில் பயணிகளை ஏற்றியபோது பேருந்தில் பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் பாஜக சின்னத்தை ஒட்ட முயன்றாராம். இதனை நடத்துனர் பாஸ்கர் தடுக்க முயன்றதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது சோடா பாட்டிலால் தாக்கிவிட்டு மருதுபாண்டியன் தப்பியோடி விட்டாராம். இதுகுறித்து புகாரின் பேரில் மருதுபாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது - கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory