» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிடப்பில் போடப்பட்டுள்ள தூத்துக்குடி ரயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை!

திங்கள் 8, ஜூலை 2024 7:35:42 PM (IST)

கிடப்பில் போடப்பட்டுள்ள தூத்துக்குடி ரயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

ரயில்வே வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருநெல்வேலி -பாலக்காடு "பாலருவி விரைவு ரயிலை" தூத்துக்குடி வரை நீடிக்க கோரியும், தூத்துக்குடி -மேட்டுப்பாளையம் வாரம் மும்முறை ரயிலையும் உடனடியாக இயக்க கோரி, 

மத்திய ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ்,  மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல். முருகன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு எக்ஸ் வலைத்தளம் மூலம் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர்,  மா. பிரமநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

அதுக்குJul 9, 2024 - 11:16:07 AM | Posted IP 162.1*****

மக்கள் ஓட்டு போட்ட அரசியல்வாதிகளை தான் செய்யணும். சும்மாவா போட்டோம் ?

ரா.வெங்கடேஷ்Jul 8, 2024 - 08:48:11 PM | Posted IP 172.7*****

அய்யா தூத்துக்குடி புதிய அறிவிப்பு இல்லை அறிவித்த ரயில்களை இயக்க மத்திய அரசு தென்னிந்திய ரெயில்வே முன்வரவேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory