» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் : கண்காணிக்கும் பணி தீவிரம்
புதன் 10, ஜூலை 2024 5:47:38 PM (IST)
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவியேற்ற நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 400 ரவுடிகள் மட்டுமே சிறையில் இருந்து வெளியில் உள்ளனர். இந்த ரவுடிகளை ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் வீதம் நெருக்கமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை தொடர் கண்காணிப்பில் வைப்பதற்கு காவலர்கள் 2 ஷிப்ட்டுகளாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.
ரவுடிகளை கண்காணித்து அவர்களின் நடவடிக்கைகளை தகவல்களாக திரட்டி, காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ரவுடிகளுக்கு உதவினாலும், அடைக்கலம் கொடுத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

காவலன்Jul 10, 2024 - 07:07:31 PM | Posted IP 172.7*****