» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் : கண்காணிக்கும் பணி தீவிரம்
புதன் 10, ஜூலை 2024 5:47:38 PM (IST)
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவியேற்ற நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 400 ரவுடிகள் மட்டுமே சிறையில் இருந்து வெளியில் உள்ளனர். இந்த ரவுடிகளை ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் வீதம் நெருக்கமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை தொடர் கண்காணிப்பில் வைப்பதற்கு காவலர்கள் 2 ஷிப்ட்டுகளாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.
ரவுடிகளை கண்காணித்து அவர்களின் நடவடிக்கைகளை தகவல்களாக திரட்டி, காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ரவுடிகளுக்கு உதவினாலும், அடைக்கலம் கொடுத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)

கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:07:40 PM (IST)

ஆலங்குளம் திமுக பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்: சொத்துவரி தாமதமாக செலுத்தியதால் அதிரடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:38:04 AM (IST)

நெல்லை முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது : வருகிற 27-ஆம் தேதி சூரசம்ஹாரம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:35:20 AM (IST)

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

காவலன்Jul 10, 2024 - 07:07:31 PM | Posted IP 172.7*****