» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலீசார் வாகன சோதனையால் போக்குவரத்து நெருக்கடி : வாகன ஓட்டிகள் அவதி!
செவ்வாய் 26, நவம்பர் 2024 11:18:59 AM (IST)

திருநெல்வேலியில் போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இருந்து டவுன் வழியாக தென்காசிக்கு செல்லும் சாலை படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி செ செல்லும் வழியான வழுக்கு ஓடை ரோட்டில் போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் வாகனங்களை சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக நிறுத்தி சோதனை செய்து வருகின்றன.
இந்தசாலை ஒரு வழிப்பாதையாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் சுமார் 1 கிமீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நேர விரயம் ஏற்படுவதாகவும், போக்குவரத்து போலீசார் சமீபகாலமாக வாகன சோதனை என்ற பெயரில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

மீட்கப்பட்ட ஆட்டோவை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக புகார்: எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:31:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)
