» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலீசார் வாகன சோதனையால் போக்குவரத்து நெருக்கடி : வாகன ஓட்டிகள் அவதி!
செவ்வாய் 26, நவம்பர் 2024 11:18:59 AM (IST)

திருநெல்வேலியில் போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இருந்து டவுன் வழியாக தென்காசிக்கு செல்லும் சாலை படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி செ செல்லும் வழியான வழுக்கு ஓடை ரோட்டில் போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் வாகனங்களை சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக நிறுத்தி சோதனை செய்து வருகின்றன.
இந்தசாலை ஒரு வழிப்பாதையாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் சுமார் 1 கிமீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நேர விரயம் ஏற்படுவதாகவும், போக்குவரத்து போலீசார் சமீபகாலமாக வாகன சோதனை என்ற பெயரில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)


