» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலீசார் வாகன சோதனையால் போக்குவரத்து நெருக்கடி : வாகன ஓட்டிகள் அவதி!
செவ்வாய் 26, நவம்பர் 2024 11:18:59 AM (IST)

திருநெல்வேலியில் போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இருந்து டவுன் வழியாக தென்காசிக்கு செல்லும் சாலை படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி செ செல்லும் வழியான வழுக்கு ஓடை ரோட்டில் போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் வாகனங்களை சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக நிறுத்தி சோதனை செய்து வருகின்றன.
இந்தசாலை ஒரு வழிப்பாதையாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் சுமார் 1 கிமீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நேர விரயம் ஏற்படுவதாகவும், போக்குவரத்து போலீசார் சமீபகாலமாக வாகன சோதனை என்ற பெயரில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)
