» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலீசார் வாகன சோதனையால் போக்குவரத்து நெருக்கடி : வாகன ஓட்டிகள் அவதி!
செவ்வாய் 26, நவம்பர் 2024 11:18:59 AM (IST)

திருநெல்வேலியில் போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இருந்து டவுன் வழியாக தென்காசிக்கு செல்லும் சாலை படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி செ செல்லும் வழியான வழுக்கு ஓடை ரோட்டில் போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் வாகனங்களை சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக நிறுத்தி சோதனை செய்து வருகின்றன.
இந்தசாலை ஒரு வழிப்பாதையாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் சுமார் 1 கிமீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நேர விரயம் ஏற்படுவதாகவும், போக்குவரத்து போலீசார் சமீபகாலமாக வாகன சோதனை என்ற பெயரில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா: சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:51:08 PM (IST)

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)
