» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தனியார் நிறுவனத்தில் பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்: அ.தி.மு.க. பிரமுகர் மகன் கைது
சனி 18, ஜனவரி 2025 9:07:46 AM (IST)
நெல்லையில் தனியார் குடிநீர் கேன் நிறுவனத்தில் பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த நிறுவன உரிமையாளரான அ.தி.மு.க. பிரமுகர் மகனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் மீரான். அ.தி.மு.க. பிரமுகர். இவருடைய மகன் முகமது ஜர்ஜின் (வயது 29). இவர் நெல்லை டவுன் மற்றும் தாழையூத்து பகுதியில் குடிநீர் கேன் வினியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர்.
இவருடைய நிறுவனத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமாேனார் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் ஒரு பெண் ஊழியரை கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது ஜர்ஜின், தனது ஆசைக்கு இணங்க அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அந்தப் பெண் மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முகமது ஜர்ஜின், அவரை சாதியை சொல்லி அவதூறாக பேசினார். பின்னர் அந்த பெண்ணை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், இதுபற்றி நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பாலியல் பலாத்காரம், சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசுதல், தாக்குதல் என 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா ஆகியோர் விசாரணை நடத்தி, முகமது ஜர்ஜினை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண்ணை சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 14, மார்ச் 2026 8:43:47 AM (IST)

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)

நெல்லையில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:30:53 PM (IST)

