» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழிலதிபர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நாணயம் கொள்ளை; பணிப்பெண் உட்பட 3 பேர் கைது!
திங்கள் 20, ஜனவரி 2025 8:43:11 AM (IST)
பாளையங்கோட்டை தொழிலதிபர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நாணயங்கள் கொள்ளையடித்த வழக்கில் பணிப்பெண் உள்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை வடக்கு ஐகிரவுண்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன் (42). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.1½ கோடி மதிப்புள்ள 2¼ கிலோ தங்க நாணயங்கள் திடீரென்று மாயமானது.
இதுகுறித்து அவர் ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ரஞ்சன் வீட்டில் வேலை பார்த்து வந்த அண்ணா நகரை சேர்ந்த சுபிதா (38) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.
அவரை ரகசியமாக கண்காணித்து விசாரித்தனர். இதில் அவர் தங்க நாணயங்களை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், தற்போது பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் வசித்து வரும் சுபிதா, திருடிய நாணயங்களை விற்ற பணத்தில் அந்த பகுதியில் ரூ.30 லட்சத்தில் சொகுசு வீடு கட்டியதும் தெரியவந்தது.
அவருக்கு உடந்தையாக கோட்டூரை சேர்ந்த உறவினர் ஆயிஷா (42) மற்றும் இவருடைய கணவர் பீர் (42) ஆகிய 2 பேரும் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு வீடு மற்றும் 60 பவுன் நகைகளை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகினறனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிபத்து எதிரொலி : அனுமதியின்றி இயங்கிய தீப்பெட்டி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:02:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)

பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் போராட்டம்!!
திங்கள் 17, பிப்ரவரி 2025 3:31:23 PM (IST)
