» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழிலதிபர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நாணயம் கொள்ளை; பணிப்பெண் உட்பட 3 பேர் கைது!
திங்கள் 20, ஜனவரி 2025 8:43:11 AM (IST)
பாளையங்கோட்டை தொழிலதிபர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நாணயங்கள் கொள்ளையடித்த வழக்கில் பணிப்பெண் உள்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை வடக்கு ஐகிரவுண்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன் (42). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.1½ கோடி மதிப்புள்ள 2¼ கிலோ தங்க நாணயங்கள் திடீரென்று மாயமானது.
இதுகுறித்து அவர் ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ரஞ்சன் வீட்டில் வேலை பார்த்து வந்த அண்ணா நகரை சேர்ந்த சுபிதா (38) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.
அவரை ரகசியமாக கண்காணித்து விசாரித்தனர். இதில் அவர் தங்க நாணயங்களை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், தற்போது பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் வசித்து வரும் சுபிதா, திருடிய நாணயங்களை விற்ற பணத்தில் அந்த பகுதியில் ரூ.30 லட்சத்தில் சொகுசு வீடு கட்டியதும் தெரியவந்தது.
அவருக்கு உடந்தையாக கோட்டூரை சேர்ந்த உறவினர் ஆயிஷா (42) மற்றும் இவருடைய கணவர் பீர் (42) ஆகிய 2 பேரும் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு வீடு மற்றும் 60 பவுன் நகைகளை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகினறனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

