» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பீகார் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்பது இதுவே முதல்முறை: கனிமொழி எம்பி கருத்து!
சனி 1, பிப்ரவரி 2025 5:13:50 PM (IST)
என்னுடைய அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் உரையின் போது, பீகாருக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் கொடுத்திருக்கிறது. இதனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் இது பீகார் மாநிலத்திற்கான பட்ஜெட் என்று விமர்சித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்று விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக தரப்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்பி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "என் அரசியல் அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அமர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறி இருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், "பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
UNMAIFeb 3, 2025 - 02:57:51 PM | Posted IP 172.7*****
TN 39 MPs DOING ANYTHING FOR TAMILANS? WASTE......
MmmmFeb 1, 2025 - 05:39:07 PM | Posted IP 172.7*****
Supper akka
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)


அந்தFeb 4, 2025 - 03:06:25 PM | Posted IP 162.1*****