» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பீகார் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்பது இதுவே முதல்முறை: கனிமொழி எம்பி கருத்து!
சனி 1, பிப்ரவரி 2025 5:13:50 PM (IST)
என்னுடைய அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிவிட்டுள்ளார். 
  நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் உரையின் போது, பீகாருக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் கொடுத்திருக்கிறது. இதனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் இது பீகார் மாநிலத்திற்கான பட்ஜெட் என்று விமர்சித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் உரையின் போது, பீகாருக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் கொடுத்திருக்கிறது. இதனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் இது பீகார் மாநிலத்திற்கான பட்ஜெட் என்று விமர்சித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்று விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக தரப்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்பி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "என் அரசியல் அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அமர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறி இருக்கிறார். 
 தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம்
 அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், "பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
UNMAIFeb 3, 2025 - 02:57:51 PM | Posted IP 172.7*****
TN 39 MPs DOING ANYTHING FOR TAMILANS? WASTE......
MmmmFeb 1, 2025 - 05:39:07 PM | Posted IP 172.7*****
Supper akka
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)

நெல்லையில் பெண் பயணியை அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்
சனி 25, அக்டோபர் 2025 8:36:18 AM (IST)

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:30:32 AM (IST)

கல்லூரி பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருட்டு : வேலைக்கார பெண் உள்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:28:01 AM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)





அந்தFeb 4, 2025 - 03:06:25 PM | Posted IP 162.1*****