» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் மூத்த செய்தியாளர் மறைவு: தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் இரங்கல்

திங்கள் 3, பிப்ரவரி 2025 10:29:23 AM (IST)

தூத்துக்குடியில் மூத்த செய்தியாளர் ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும், மதிமுகம் தொலைக்காட்சி செய்தியாளருமான ஆர்.ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். 

அன்னாரது இறுதி சடங்குகள் இன்று (03.02.2025) மாலை பக்கிள்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந்த நிலையில், செய்தியாளர் ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சக்தி ஆர்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

JOSEPHFeb 3, 2025 - 11:09:22 AM | Posted IP 172.7*****

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்ட அலைஓசை நிருபர் செ. ஜோசப்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory