» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தங்கை கணவரை தாக்கியதாக மைத்துனர் கைது
திங்கள் 24, மார்ச் 2025 8:46:54 AM (IST)
திசையன்விளை தங்கையின் கணவரை தாக்கியதாக அவரது மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடியைசேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வெள்ளப்பாண்டி(40) தொழிலாளி. இவருக்கும் சாத்தான்குளம் அருகே புத்தன் தருவை சேர்ந்த சங்கரன் மகளுக்கும் திருமணம் முடிந்துள்ளது. இதனிடையே வெள்ளப்பாண்டி மற்றும் மாமனார் சங்கரன் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்சங்கரன், பேச்சுவார்த்தை நடத்த வீட்டுக்கு வருமாறு வெள்ளப்பாண்டியிடம் போனில் கூறியுள்ளார். இதையடுத்து வெள்ளப்பாண்டி, கடந்த 21ம் தேதி தனது மாமனார்ச ங்கரன் வீட்டுக்குசென்றார். அப்போது வெள்ளப்பாண்டி மனைவியின் சகோதரர் முத்துசாமி (40) என்பவர் வெள்ளப்பாண்டியை அவதூறாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெள்ளப்பாண்டி, தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர்ர் அனிதா வழக்குபதிந்து வெள்ளப்பாண்டியை தாக்கிய முத்துசாமியை கைதுசெய்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
புதன் 14, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)

திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)

