» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு : சிறப்பு மக்கள் நீதிமன்றம் உத்தரவு
சனி 12, ஏப்ரல் 2025 8:45:17 AM (IST)

தூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க சிறப்பு மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடியை சேர்ந்த துரைசிங் என்பவர், தூத்துக்குடி 4-ம் கேட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது கார் மோதி படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் நஷ்டஈடு கோரி தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு சிறப்பு மக்கள் கோர்ட்டில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பிறகு, துரைசிங்குக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 6 ஆயிரத்து 486 நஷ்ட ஈடு தொகை வழங்க முதன்மை நீதிபதி வசந்தி உத்தரவிட்டார். இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா மற்றும் வக்கீல்கள் ரெங்கநாதன், குருசாமி, பால்ஆசீர் ஆகியோர் ஆகினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

grrjaApr 12, 2025 - 10:56:34 AM | Posted IP 162.1*****