» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி: ராபர்ட் புரூஸ் எம்.பி., பங்கேற்பு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:02:43 PM (IST)

பாளையங்கோட்டையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் ராபர்ட்புரூஸ் எம்.பி., உட்பட திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேவின் சிலுவைப்பாடுகளையும், உயிர்த்தெழுலையும் தியானிக்கும் வகையில் ஆண்டுதோறும் 40 நாட் கள் தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். இது லெந்து காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு லெந்துகாலம் கடந்த மார்ச் 5ம் தேதி சாம்பல் புதன் அன்று துவங்கியது.
இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. தவக்கால சிலுவை பயண நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. பாளையங்கோட்டையில் நேற்று புனித வாரத்தின் துவக்கமாக குருத்தோலை ஞாயிறு ஆசரிக்கப்பட்டது.
பாளை சவேரியார் பேராலயத்திலிருந்து தொடங்கிய குருத்தோலை ஞாயிறு பவனிக்கு சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புருஸ் எம்பி, முன்னிலை வகித்தார்.
இதில் சிஎஸ்ஐ பேராயரின் துணைவியார் ஜாய் பர்னபாஸ் உதவி குரு வேதபிரபா பொன்ராஜ், மிலிட்டரிலைன் சேகர தலைவர் மருதம், பாளை மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், மறைமாவட்ட செயலகமுதல்வர் ஞானப்பிரகாசம். ஆயரின் செயலாளர் மிக்கேல்ராஜ், சவேரியார் ஆலய பங்குத் தந்தை சந்தியாகு, உதவி பங்குத்தந்தைகள் ஜான்சன் சந்தியாகு மற்றும் இருபால் துறவற சபைகனைச் சேர்ந்த குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதர, சகோதரிகள் சவேரியார் பேராலய அனைத்து அன்பிய மண்ட லங்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சேவியர் அமல்ராஜ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குருத்தோலை பவனி சவேரியார் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மிலிட்டரிலைன் கிறிஸ்துவ ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஓசன்னா பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஆராதனையில் குருவானவர் ஜெனிபாராணி வேதப்பாடம் வாசித்தார். பேராயர் பர்னபாஸ் சிறப்பு செய்தியளித்து இறைஆசி வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)




