» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பதற்கான மகளிர் உதவி எண்.181 தொடர்புக் கொள்ளலாம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 9:23:51 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம், கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட அறிவியல் மையத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கமும், பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் செய்தியாளர்களுடன் நடைபெற்றது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அந்த பகுதியில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகை அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார அலுவலர்கள், நகர சுகாதார பணியாளர்கள் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் பெண் சிசுவதை தடுப்புச்சட்டம், குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளின் கல்வி தொடர்பாகவும் குழந்தை திருமணம் தடுத்தல் தொடர்பாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொடர்பாகவும் அடிப்படை சட்ட விதிகளும், உரிமைகள் குறித்தும், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013, வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098, மகளிர் உதவி எண் 181 தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள், தலைமை ஆசிரியர்கள், மகளிர் காவல்துறை அலுவலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் மாவட்ட காவல் துறையின் மூலம் சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சி வழங்கப்படுகின்றது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து முதிர்வு பெற வேண்டிய பயனாளிகளை கண்டறியவும், புதிய பயனாளிகளை சேர்க்கவும், வட்டார அளவில் பணிபுரியும் மகளிர் ஊர் நல அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெண்களுக்கு ஏற்படும் குற்றங்கள் தொடர்பான உதவி எண்களுக்கு 8667344764 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். புகார்கள் தெரிவிப்பவர்களின் விவரங்கள் காக்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)
