» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
புகார் பதிவு செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் தகவல்!
சனி 3, மே 2025 8:44:08 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யவில்லை என்று ஏதேனும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வரவேற்பாளர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் மக்கள் காவல் நிலையங்களில் மனு கொடுக்க செல்லும்போது அனைத்து மனுக்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது கொடுக்கப்படும். இதனால் காவல் நிலையங்களில் புகார் மனு பெற மறுத்து நிராகரிப்பது குறைந்துள்ளது. அதுபோன்று புகார் பதிவு செய்யவில்லை என்று ஏதேனும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சுமார் 700 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளோம். மாவட்டத்தில் காவல்துறையில் சுமார் 250 காலிப் பணியிடங்கள் உள்ளன. மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 16 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 13 காவல் நிலையங்களை இன்ஸ்பெக்டர் தலைமையில் செயல்படும் வகையில் தரம் உயர்த்த பரிந்துரை செய்து உள்ளோம். இதற்கான உத்தரவுகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் முழுநேரம் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று உட்கோட்ட அளவிலான சோதனைச் சாவடிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!
சனி 14, ஜூன் 2025 5:17:55 PM (IST)

திருநெல்வேலியில் உலக குருதி கொடையாளர் தினம்: ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 14, ஜூன் 2025 3:53:17 PM (IST)

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
சனி 14, ஜூன் 2025 9:04:09 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் ஆய்வு
வெள்ளி 13, ஜூன் 2025 5:34:11 PM (IST)

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்தார் சபாநாயகர்!
வெள்ளி 13, ஜூன் 2025 12:46:34 PM (IST)

வள்ளியூரில் 1 கிலோ பறிமுதல் : வாலிபர் கைது!
வெள்ளி 13, ஜூன் 2025 10:52:23 AM (IST)

கே.கணேசன்.மே 4, 2025 - 09:09:44 PM | Posted IP 172.7*****