» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புகார் பதிவு செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் தகவல்!

சனி 3, மே 2025 8:44:08 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யவில்லை என்று ஏதேனும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் சில சம்பவங்கள் காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த சம்பவங்களில் போலீசார் மீது எந்தவித தவறும் இல்லை என்பதும், அந்த சம்பவங்களில் நடந்த உண்மைத் தன்மை குறித்து விளக்கப்பட்டு உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வரவேற்பாளர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் மக்கள் காவல் நிலையங்களில் மனு கொடுக்க செல்லும்போது அனைத்து மனுக்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது கொடுக்கப்படும். இதனால் காவல் நிலையங்களில் புகார் மனு பெற மறுத்து நிராகரிப்பது குறைந்துள்ளது. அதுபோன்று புகார் பதிவு செய்யவில்லை என்று ஏதேனும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சுமார் 700 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளோம். மாவட்டத்தில் காவல்துறையில் சுமார் 250 காலிப் பணியிடங்கள் உள்ளன. மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 16 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 13 காவல் நிலையங்களை இன்ஸ்பெக்டர் தலைமையில் செயல்படும் வகையில் தரம் உயர்த்த பரிந்துரை செய்து உள்ளோம். இதற்கான உத்தரவுகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் முழுநேரம் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று உட்கோட்ட அளவிலான சோதனைச் சாவடிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

கே.கணேசன்.மே 4, 2025 - 09:09:44 PM | Posted IP 172.7*****

மிக்க நன்றி வணக்கம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory