» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆன்லைன் மூலம் புகார் கொடுத்தால் மாநகராட்சி பணியாளர்கள் வீடு தேடி வருவார்கள்: மேயர் தகவல்
புதன் 7, மே 2025 5:47:58 PM (IST)
ஆன்லைன் மூலம் பொதுமக்கள் புகாா் கொடுத்தால் பணியாளர்கள் உடனடியாக வீடு தேடி வந்து குறைகளை தீர்ப்பார்கள் என்று மேயர் ஜெகன் பொியசாமி கூறினார்.

இந்த மண்டலத்தில் இதுவரை 546 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பொறுப்பேற்று நான்கு வருடம் முடிந்து 5ம் வருடம் துவங்கிவிட்டது. எந்த ஒரு குறைகளும் கிடையாது குறைபாடு இல்லாத நிலை தான் உள்ளது. ஆன்லைன் மூலம் பொதுமக்கள் புகாா் கொடுக்கலாம் பணியாளர்கள் உடனடியாக உங்கள் வீடு தேடி வருவார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல ஊக்கம் வந்து பொதுமக்கள் ஊக்கத்தால் நூறு சதவீதம் பணிகளை முழுமையாக செய்து கொடுப்போம் எந்த சலசலப்புக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். கடந்த வாரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் எனது பந்தலை மாநகராட்சி அதிகாரிகள் பிரித்து விட்டார்கள் என்று கூறினார்கள் மக்களுக்கு பணி செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு.
சட்டத்திற்குட்பட்டு பேருந்து நிலையத்திற்கு தினசரி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கிறார்கள் அந்த இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனுமதியும் பெறவில்லை மாநகராட்சி சார்பில் 10 இடங்களில் குடிநீர்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவர் உத்தரவின் பேரிலும் நாங்களும் குடிநீர் பந்தல் அமைத்துள்ளோம்.
இந்த வாசல் முன்பு வந்து பந்தல் அமைத்தால் அதிகாரிகள் அப்புறப்படுத்த தான் செய்வார்கள் அனுமதி யார் கேட்டாலும் கொடுக்கப்படும். பேருக்கு மட்டும் விளம்பரம் வைத்து சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதார கேடாக நடத்தக்கூடாது தவறான தகவல்களை பரப்பக்கூடாது.
பாதாள சாக்கடை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 20 சதவீத பணிகளும் விரைவாக செய்து கொடுக்கப்படும். அதே போல் மாநகராட்சி கழிவு நீர் சுத்தகாிப்பு பணிகளை சாக்கடைக்குள் இறங்காமல் மிஷின் மூலம் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும் உள்ளே இறங்கி பணியாளா்கள் வேலை செய்ய வேண்டிய நிலை தற்போது இல்லை என்று மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.
கூட்டத்தில் பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி ஆணையர் சுரேஷ்குமார், நகர அமைப்பு திட்ட பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன், நகர்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகா், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், ககவுன்சிலர்கள் தெய்வேந்திரன், நாகேஸ்வாி, ஜெயசீலி, கற்பககனி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், வட்டச்செயலாளர் ரவீந்திரன், வட்டப்பிரதிநிதி புஷ்பராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ேஜஸ்பர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகா், சுகாதார ஆய்வாளர் ராஜசேகா், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

மக்கள்மே 7, 2025 - 10:36:40 PM | Posted IP 104.2*****