» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் காவலர் கைது
புதன் 16, ஜூலை 2025 8:16:06 AM (IST)
திருச்செந்தூரில் உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூரைச் சேர்ந்தவர் மிகாவேல். இவர், சில ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 15 நாள்களுக்கு முன்பு மிகாவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஆறுமுகநேரியில் இவர் பணியாற்றிய போது, அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்தார். அதன்பேரில், மிகாவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து இவரை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)

NAAN THAANJul 18, 2025 - 10:52:17 AM | Posted IP 172.7*****