» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆலங்குளம் திமுக பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்: சொத்துவரி தாமதமாக செலுத்தியதால் அதிரடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:38:04 AM (IST)
சொத்துவரி தாமதமாக செலுத்திய விவகாரத்தில் ஆலங்குளம் பேரூராட்சி தலைவியை தகுதி நீக்கம் செய்து செயல் அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், ஆலங்குளம் பேரூராட்சி தலைவி சுதா மோகன்லால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வெங்கடகோபு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆலங்குளம் பேரூராட்சி தலைவி சுதா மோகன்லால் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான சொத்து வரியினை உரிய காலத்தில் செலுத்தாமல் காலம் தாழ்த்தி செலுத்தி இருக்கிறார். கட்டிடங்களுக்கான ரூ.6,500 சொத்து வரியினை உரிய காலத்தில் செலுத்த தவறியதால் அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆலங்குளம் பேரூராட்சி 9-வது வார்டு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் பேரூராட்சிகள் இயக்குனருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணை செயல்படுத்தப்பட்டது. நீதிமன்ற ஆணையின்படி, பேரூராட்சி தலைவி சுதா மோகன்லால் தனது கட்டிடங்களுக்கு சொத்து வரியை உரிய காலத்திற்குள் செலுத்தாமல் காலம் தாழ்த்தி செலுத்தியதால் ஆலங்குளம் பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது : வருகிற 27-ஆம் தேதி சூரசம்ஹாரம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:35:20 AM (IST)

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்தது!
புதன் 22, அக்டோபர் 2025 8:55:10 AM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:09:49 PM (IST)

சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள்: ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் அட்வைஸ்!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 3:39:28 PM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)
