» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் : தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஆய்வு!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:02:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் திவாரி ஆய்வு செயதார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், களக்காடு, சேரன்மகாதேவி, முன்னீர்பள்ளம் போன்ற இடங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் திவாரி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், "இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில், 01.01.2026 - ஆம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கணக்கெடுப்பு காலத்தின் கடைசி தேதியினை 11.12.2025 வரை கால நீடிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் கணக்கீட்டுப் படிவங்கள் 100% Blo mobile App ல் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட வாக்காளர்களில் முந்தைய 2002 மற்றும் 2005 சிறப்பு தீவிர திருத்தத்தின் போது உள்ள வாக்காளர்கள் விபரங்களை தெரிவிக்காதவர்களுக்கு வாக்காளர்கள், வாக்காளர்களின் பெற்றோர்கள்/பெற்றோர்களின் பெற்றோர் விவரங்களை கண்டறிந்து பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி 100% முடிந்துள்ளது. மேலும் கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இறப்பு போன்ற இனங்களில் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளியூர் காமராஜர் நகர் பகுதி மற்றும் தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளிலும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு சிங்கம்பத்து, இடையன்குளம், முன்னீர்பள்ளம், ஆகிய பகுதிகளிலும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளிலும் கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இறப்பு தொடர்பான சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை மற்றும் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் பேட்டி
வியாழன் 4, டிசம்பர் 2025 3:44:35 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆர்வலர் தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 3:31:53 PM (IST)

கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
வியாழன் 4, டிசம்பர் 2025 12:04:01 PM (IST)

தலைமைக் காவலரை கொல்ல முயற்சி: 5பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீசு்சு!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:34:18 AM (IST)

தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்
புதன் 3, டிசம்பர் 2025 4:34:24 PM (IST)

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு!!
புதன் 3, டிசம்பர் 2025 8:24:25 AM (IST)


