» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)



திருப்பரங்குன்றத்தில் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

தூத்துக்குடியில், பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மண்டல் சார்பாக முத்தையாபுரம் பல்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் மண்டல் தலைவர் மாதவன், கிழக்கு மண்டல் பிராபாரி சத்தியசீலன், மாவட்டத் துணைத் தலைவர் மாசாணம், மாவட்ட பொருளாளர் பரமசிவம், பிரிவு தலைவர் சின்ன தங்கம்,  சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.



வடக்கு மாவட்ட பாஜக சார்பில் கேடிசி நகர் வெங்கடேஸ்வரா டீக்கடை ஜங்ஷன் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் & ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வீரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில் 

கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு பாஜக சார்பில் நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக வடக்கு மாவட்ட பொருளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்ராஜ், வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் நீதிப்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்ட பாஜக தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து

கே.கணேசன்.Dec 6, 2025 - 10:18:03 AM | Posted IP 172.7*****

தமிழக அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory