» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்குதந்தைக்கு எதிர்ப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்கு தந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தவர் மீது பல்வேறு புகாரின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள புதிய பங்குத்தந்தை ஆலயத்திற்கு வந்தார். அவரை உள்ளே விடாமல் பதவி நீக்கம் ஏற்பட்ட பங்கு தந்தையின் ஆதரவாளர்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுமார் அரை மணி நேரம் ஜெப ஆராதனை நடைபெறவில்லை. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஜெப ஆராதனைகள் நடந்தது. இதனால் ஆலயத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)


அவுங்கDec 11, 2025 - 12:19:03 PM | Posted IP 162.1*****