» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே கூட்டம், கூட்டமாக வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:03:08 PM (IST)

நெல்லை அருகே உள்ள வடக்கு கழுநீர் குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வந்துள்ளன. அவை மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கத்தை தொடங்கின.
பறவைகள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, தங்களது இனப்பெருக்கத்துக்கு சாதகமான இடங்களுக்கு வலசை செல்வது வழக்கம். அந்த வகையில் மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் கடும் பனி நிலவும் மாதங்களில் அவை தென் இந்தியாவுக்கு வருகிறது.
குறிப்பாக அக்டோபர் மாதம் கூட்டம், கூட்டமாக தமிழகத்துக்கு வரும் பறவைகள் நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், திருப்புடைமருதூர் பறவைகள் பாதுகாப்பகம், விஜயநாராயணம், கங்கைகொண்டான், ராஜவல்லிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களில் காணப்படும். இதேபோல் நெல்லை அருகே உள்ள வடக்கு கழுநீர்குளம் குளத்திலும் செங்கால் நாரை, குமிழ் வாய் வாத்து, வரித்தலை வாத்து உள்பட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வலசை வந்துள்ளன.
கூழக்கடா பறவைகளும் அங்கு அதிகளவு காணப்படுகிறது. இவை ஈர நிலங்கள், அதை சார்ந்துள்ள பசுமையான வயல் வெளிகளில் உணவு தேடுவதுடன், அங்குள்ள மரங்களிலும் கூடுகட்டி இனப்பெருக்கத்தை தொடங்கி உள்ளன. முட்டையிட்டு குஞ்சுபொரித்து குஞ்சுகளுடன் வருகிற மார்ச் மாதம் முடிந்த பிறகு மீண்டும் மத்திய ஆசிய பகுதிகளுக்கு திரும்பி சென்று விடும் என்று வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே அக்காவை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:09:16 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீபத்திருவிழா கோலாகலம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திங்கள் 19, ஜனவரி 2026 8:26:27 AM (IST)

நெல்லை அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை : உறவினர் கைது!
சனி 17, ஜனவரி 2026 8:40:25 AM (IST)

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

