» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உரிய நேரத்தில் சிறந்த கூட்டணியை அறிவிப்போம் : தென்காசியில் பிரேமலதா பேட்டி

வெள்ளி 30, ஜனவரி 2026 8:28:10 AM (IST)

அனைத்தும் தோழமைக் கட்சிகள் தான், உரிய நேரத்தில் சிறந்த கூட்டணியை அறிவிப்போம் என தென்காசியில் பிரேமலதா கூறினார்.

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்கின்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று காலை தனது மகனும், இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரனுடன் குற்றாலநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதன்பிறகு பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துவிட்டது. சென்னையில் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார்.

தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: அனைத்தும் தோழமைக் கட்சிகள் தான். உரிய நேரத்தில் எங்கள் கட்சிக்கும், எதிர்காலத்திற்கும் சிறந்த கூட்டணியை அறிவிப்போம். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தே.மு.தி.க. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடாது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சரியான நேரத்தில், சரியான கூட்டணி அமைத்து அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இன்று (வெள்ளிக்கிழமை) பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் நெல்லைக்கு வருகிறார்கள். அவர்கள் நெல்லை தச்சநல்லூர் மதுரை ரோட்டில் உள்ள அமோகா பேலசில் காலை 11 மணிக்கு நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட தே.மு.தி.க செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory