» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மொத்தமாக ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு கணிக்கப்பட்டுள்ளது என்று வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நபார்டு (NABARD) தயாரித்த 2026–27 ஆண்டிற்கான கடன்திட்ட அறிக்கை (Potential Linked Credit Plan – PLP) மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மொத்தமாக ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு கணிக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறைக்கு ரூ.17,901.80 கோடி கடன் வாய்ப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பயிர் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் சந்தைப்படுத்தலுக்காக ரூ.13,545.97 கோடி, வேளாண்மை மற்றும் இணைத் துறைகளுக்கான காலவரையறை கடன்களுக்காக ரூ.3,063.01 கோடி, வேளாண்மை உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.1,044.34 கோடி மற்றும் துணைச் செயல்பாடுகளுக்காக ரூ.248.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) துறைக்கு ரூ.3,144.54 கோடி கடன் வாய்ப்பு கணிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் குருசாமி, ரிசர்வ் வங்கி (தலைமை மாவட்ட அதிகாரி) அன்பரசு அவர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் பாஸ்கரன், ஆவின் பொது மேலாளர் பாசு, துணைப்பதிவாளர் (பால்வளம்) சைமன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)

