» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அம்ரித் பாரத் ரயில்: கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிப்பு? பயணிகள் அதிருப்தி!
திங்கள் 9, மார்ச் 2026 5:44:32 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்ரித் பாரத் ரயில்களில், மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் புறக்கணிக்கப்படுவதாகப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தற்போது நாகர்கோவில் - மங்களூரு, திருவனந்தபுரம் - தாம்பரம் மற்றும் நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி ஆகிய மூன்று வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், நாகர்கோவில் - மங்களூரு ரயிலுக்கு (16329/16330) ரயில்வே வாரியம் சார்பில் கேரள மாநிலத்தின் தலசேரி, சாஸ்தான்கோட்டை மற்றும் வடகரா ஆகிய மூன்று நிலையங்களில் புதிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிறுத்தங்கள் மார்ச் 3 (நாகர்கோவிலில் இருந்து) மற்றும் மார்ச் 4 (மங்களூருவில் இருந்து) முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளன. கேரளாவில் சிறிய நிலையங்களுக்குக் கூட நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கிய ரயில் நிலையங்களான இரணியல் மற்றும் குழித்துறை ஆகியவற்றுக்கு அம்ரித் பாரத் ரயில்களில் நிறுத்தம் வழங்கப்படவில்லை.
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரயிலுக்கும் இரணியலில் நிறுத்தம் இல்லை.ஏற்கனவே திருநெல்வேலி - ஜாம்நகர் ரயிலுக்கு, குழித்துறையை விட வருவாய் குறைந்த கேரளாவின் பாறசாலை நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டு, குழித்துறை புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெல்லிக்குச் சென்று ரயில்வே வாரிய அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து, வருவாய் மற்றும் புள்ளிவிவர ஆதாரங்களுடன் வாதிட்டுத் தங்கள் தொகுதிகளுக்குத் தேவையான நிறுத்தங்களைப் பெற்று வருகின்றனர். "வெறுமனே கோரிக்கை மனுக்களை அளிப்பதோடு நின்றுவிடாமல், கேரளா எம்.பி.க்களைப் போல கன்னியாகுமரி எம்.பி.யும் தீவிரமாகப் போராடி, ரயில்வே வாரியத்திடம் இருந்து புதிய நிறுத்தங்களுக்கான ஆணையைப் பெற வேண்டும்" என மாவட்ட பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

